மதுரை : கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரும் வழக்கில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நகர் பகுதிகளில் 92 சதவீதமும், கிராமப்புறங்களில் 64 சதவீதமும் மின்சார இணைப்பு வழங்கப்பட்டுவிட்டது என தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. பேரிடர் மீட்பு குழுக்களில் ஒன்றை தவிர 7 குழுக்கள் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறது என்றும், மக்களுக்கு தேவையானவற்றை செய்ய ஊராட்சி மற்றும் கிராம வாரியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கில், நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை அறிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி