×

வேலியே பயிரை மேய்ந்தது ... பலாத்கார புகார் அளித்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்த எஸ்.ஐ.

தானே: பலாத்கார புகார் அளித்த பெண்ணையே மிரட்டி பலாத்காரம் செய்த போலீஸ் அதிகாரிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பிவாண்டியில் உள்ள சாந்திநகர் போலீஸ் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ரோஹன் கொன்ஜாரி. சமீபத்தில் இளம்பெண் ஒருவர் இந்த போலீஸ் நிலையத்தில் இரண்டு பேருக்கு எதிராக பலாத்கார புகார் அளித்தார். அந்த புகாரில், ‘‘சதீஷ், சலீம் ஆகிய இருவர் என்னை பலாத்காரம் செய்தனர். இதற்கு சதீஷின் முன்னாள் காதலி உடந்தையாக இருந்தார். என்னை பலாத்காரம் செய்த காட்சியை அவர்கள் வீடியோவில் படம் பிடித்து வைத்துக் கொண்டு என்னை மிரட்டி என்னிடம் இருந்து ₹43,000 பறித்துக் கொண்டனர்’’ என்று கூறப்பட்டிருந்தது.

இந்த புகார் குறித்து சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தார். ஆனால், நியாயமாக விசாரணை நடத்த வேண்டிய பொறுப்பில் இருந்த ரோஹன், புகார் அளித்த பெண்ணையே மிரட்டத் தொடங்கினார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால், பொய் வழக்குப் பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவேன் என்று அந்த பெண்ணை மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ரோஹனுக்கு எதிராக கொன்காவ் போலீஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தார். அந்த புகாரில் அவர் கூறியிருந்ததாவது;
சதீஷ் நக்கல்வார் என்ற வாலிபரை நான் காதலித்து வந்தேன். இதற்கு அவரது முன்னாள் காதலி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். சதீஷிடம் இருந்து விலகிவிடுமாறு அவர் என்னை எச்சரித்தார். ஆனால், சதீஷூடனான எனது உறவு தொடர்ந்தது.

இதனால், ஆத்திரமடைந்த சதீஷின்  முன்னாள் காதலி தனது நண்பன் சலீம் என்பவனை தூண்டி விட்டு என்னை பலாத்காரம் செய்ய வைத்தார். பிரச்னையை பேசி தீர்க்க வேண்டும் என ஒரு இடத்துக்கு என்னை அழைத்த அவர்கள், மயக்க மருந்து கலந்து கொடுத்த குளிர்பானத்தை குடித்தேன். அதன் பிறகு சலீம் என்னை பலாத்காரம் செய்தார். இந்த பாலியல் காட்சியை அவர்கள் வீடியோவில் பதிவு செய்து கொண்டனர். சதீஷின் திட்டப்படிதான் இதெல்லாம் நடந்தது என்பது எனக்கு பின்னர்தான் தெரியவந்தது. பாலியல் வீடியோவை காட்டி மிரட்டி அவர்கள் என்னிடம் ₹43,000 பறித்தனர். இதுபற்றி நான் சாந்திநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் எனது புகாரை பதிந்து கொண்டு பின்னர் என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார்.அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கூறப்பட்டுள்ளது.புகார் பற்றி அறிந்ததும் ரோஹன் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SI ,Veli ,gang , Rape, police officer
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது