சென்னை : கஜா புயல் சீரமைப்பு பணிகளில் அரசின் வேகம் போதாது; துரிதப்படுத்த வேண்டும் என்று சென்னை விமான நிலையத்தில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பேட்டி அளித்துள்ளார். கஜா புயல் பாதித்த இடங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும் என்று தெரிவித்த அவர், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் அனைவரையும் புயல் பாதித்துள்ளது என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சரியாக இருந்திருக்கலாம்; ஆனால் அதையும் தாண்டி பாதிப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி