திருவாரூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் திருவாரூர் மாவட்டமும் ஒன்றாகும். இங்கு சுமார் 650 குடும்பங்கள் உள்ளன. ஆனால் புயல் பாதித்து 7 நாட்கள் ஆகியும் தற்போது வரை புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரையில் அமைச்சர்களும், அதிகாரிகளும் பார்வையிடவில்லை என கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 200 க்கும் மேற்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். எங்களது கிராமங்களில் எந்த அமைச்சர்களும், எந்த அதிகாரிகளும் இதுவரை பார்வையிடவில்லை.
மேலும் எந்த நிவாரண பொருட்களும் எங்களது கிராமத்திற்க்கு வரவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். குடிக்க தண்ணீர் கூட இல்லாத சூழல் நிலவிவருவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காலையில் 10 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் இதுவரை எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை எனவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி