சென்னை: ராஜஸ்தானை தலைமையகமாக கொண்டு செயல்படும் ஆலென் கேரியர் இன்ஸ்டிடியூட் அதன் கிளைகளை சென்னையில் துவக்கியுள்ளது. ஆலென் கேரியர் இன்ஸ்டிடியூட் ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வேலை வாய்ப்புக்கான கல்விச்சேவைகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் ஜேஇஇ, நீட், எய்ம்ஸ், தேசிய திறனறி தேர்வு, பள்ளி மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை நடத்துகிறது. இதில் பயிற்சி பெற்ற பலர் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை அண்ணா நகர், அடையாறு, வேளச்சேரி ஆகிய இடங்களில் கிளைகளை தொடங்கியுள்ளது. தொடக்க விழா சென்னை கிண்டியில் நேற்று நடந்தது. வனத்துறை அதிகாரி ராகேஷ் துவக்கி வைத்தார்.
ஆலென் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இந்த நிறுவன பயிற்சி வகுப்புகளில் சேர ஆலென் ஷார்ப் நுழைவுத்தேர்வு வரும் டிசம்பர் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வில் 7,8,9,10ம் வகுப்புகள் மற்றும் பிளஸ்2 மாணவர்களுக்கு அவர்களின் அறிவியல் பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். சிறந்த மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்படும். அதோடு, பயிற்சி கட்டணத்தில் 90 சதவீத விலக்கு அளிக்கப்படுகிறது. ராணுவம், துணை ராணுவத்தில் பணியாற்றுவோரின் வாரிசுகளுக்கும் சிறப்பு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த நுழைவுத்தேர்வுக்கு சென்னை ஜாபர்கான்பேட்டையில் இயங்கி வரும் ஆலென் சென்டரில் விண்ணப்பிக்கலாம் அல்லது www.allen.ac.in/ALLENSharp என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி