சென்னை: அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெரம்பூர், திருப்போரூர், பரமக்குடி, மானாமதுரை ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் எடப்பாடி பழனிச்சாமி அரசு மக்கள் நல திட்டங்களையும், தொகுதி நலனையும் தொடர்ந்து புறக்கணித்து வருவதை கண்டித்து அமமுக சார்பில் வரும் 17, 18, 20, 21 ஆகிய தேதிகளில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போராட்டம் தள்ளிவைக்கப்படுகிறது. இதற்கான மாற்று தேதிகளில் பின்னர் அறிவிக்கப்படும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி