×

இஸ்லாமியர்களுக்கு உருது பள்ளி: கே.பி.சங்கர் வாக்கு சேகரிப்பு

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதி திமுக வேட்பாளர்  கே.பி.சங்கர் நேற்று திருவொற்றியூரில் உள்ள மசூதிக்கு சென்று இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, இஸ்லாமிய நிர்வாகிகள், கடந்த திமுக ஆட்சியில் இஸ்லாமியர்களுக்காக பேசின் சாலையில் இடுகாடு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டது. தற்போது அந்த இடுகாட்டின் சுற்றுச்சுவர் பழுதடைந்துள்ளது. அதை புதுப்பித்து, அதன் அருகில் தமிழ் மற்றும் உருது பள்ளி கட்டித் தரவேண்டும், என்றனர். இதற்கு பதிலளித்து பேசிய கே.பி.சங்கர், ‘சிறுபான்மை மக்களுக்காக கலைஞரும், மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் கொண்டு வந்தனர். ஆனால், அதிமுக ஆட்சியில் சிறுபான்மை மக்களின் முன்னேற்றத்திற்கு எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள சிறுபான்மை மக்கள் திமுகவிற்கு ஆதரவளித்து  பணியாற்றுகின்றனர். திமுக ஆட்சி அமைந்தவுடன் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவேன். எனவே உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்  என்றார். அப்போது இஸ்லாமியர்கள், கே.பி.சங்கரை கட்டித்தழுவி  எங்கள் ஓட்டு உதயசூரியனுக்கே  என்று உறுதி அளித்தனர். பிரசாரத்தின் போது திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஏராளமானோர் உடன் சென்றனர். …

The post இஸ்லாமியர்களுக்கு உருது பள்ளி: கே.பி.சங்கர் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Urdu School for Islamists ,K. GP ,Thiruvoteur Constituency ,Djagagam ,K.K. GP ,Sankar ,Thiruvouteur ,Urdu School for Islamists: ,K. GP Sankar ,
× RELATED 2026 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை...