×

வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்: தா.மோ.அன்பரசன் பிரசாரம்

ஆலந்தூர்: ஆலந்தூர் தொகுதி திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசன், மூவரசன்பட்டு  ஊராட்சி பகுதியில் வாக்கு சேகரித்தார். அவருடன் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜி.கே.ரவி, வட்டார காங்கிரஸ் தலைவர் சுரேஷ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தென்சென்னை மாவட்ட செயலாளர் பாக்கியம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர். மக்கள் மத்தியில் தா.மோ.அன்பரசன் பேசுகையில், ‘மூவரசம்பட்டு ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுப்பேன். மூவரசன்பட்டு ஊராட்சி குளத்திற்கு சுற்றுச்சுவர், நடைமேடை, காரிய மண்டபம், நூலக கட்டிடம், சாலை பணிகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.86 லட்சத்தில் பணிகளை நிறைவேற்றி தந்துள்ளேன். தொடர்ந்து, வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்.மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளபடி கொரோனா நிவாரணம் ரூ.4 ஆயிரம், பெண்களுக்கான உரிமை தொகை ரூ.1000, சமையல் எரிவாயு மானியம் போன்றவற்றை பெற்றுத்தருவேன். எனவே, எனக்கு வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும்,’ என்றார். மாணவரணி அமைப்பாளர் ஜி.கே.வி.பிரபாகரன், ஒன்றிய இளைஞரணி செயலாளர் பிரசாத் உதயகுமார், முன்னாள் கவுன்சிலர்கள் விக்டோரியா சதீஷ், ராஜேந்திரன், அப்துல் காதர், எம்.கே.பழனி, சுகுமாரன், சீனிவாசன், விடுதலை சிறுத்தைகள் கிளை செயலாளர் சந்திரன், சிபிஎம் ஹரி, மோகன்ஜி, மனிதநேய மங்கள் கட்சி, முகமது யூசுப் ஆகியோரும் உடன் சென்று  வாக்கு சேகரித்தனர்….

The post வளர்ச்சி பணிகளை மேற்கொள்வேன்: தா.மோ.அன்பரசன் பிரசாரம் appeared first on Dinakaran.

Tags : Tha.Mo.Anparasan ,Prasaram ,Alandur ,Constituency ,DMK ,T.Mo.Anparasan ,Muvarasanpattu panchayat ,Union Secretary ,Jayakumar ,Dinakaran ,
× RELATED ‘முதல்வரை கொன்றால் என்ன செய்வாய்’ என...