×

போதையில் பைக் ஓட்டியவரை பிடித்ததால் போலீஸ்காரரின் மண்டை உடைப்பு: ஆசாமி கைது

சென்னை: சென்னை பாரிமுனை பூக்கடை போக்குவரத்து பிரிவு காவலராக பணியாற்றுபவர் நாகராஜ் (43). இவர், நேற்று முன்தினம் இரவு சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில், போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்தவரை மடக்கி சோதனை செய்தபோது, மது அருந்தி இருப்பது தெரிந்தது. போலீசார், அவரது பைக்கை பறிமுதல் செய்தனர். இதனால், கடும் ரகளையில் ஈடுபட்டார்.  இதையடுத்து, அந்த நபர் போதையில் இருப்பதை உறுதி செய்வதற்கு, சக போலீசார் உதவியுடன் அவரை மடக்கிப்பிடித்து, ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு, டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, அந்த நபர் மது அருந்தி இருப்பது   உறுதியானது. இதையடுத்து அவரின் பைக்கை பறிமுதல் செய்தனர். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர், கீழே கிடந்த கல்லை எடுத்து சரமாரியாக போலீசார் மீது வீசினார்.  இதில் போலீஸ்காரர் நாகராஜின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதை பார்த்து சக போலீசார் நாகராஜை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அந்த பின்னர், நபரை பூக்கடை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அயனாவரத்தை சேர்ந்த தனவேல் (45) என்பது தெரியவந்தது. பணியில் இருந்த போலீசை தாக்கியது, போதையில் வாகனம் ஓட்டியது ஆகிய பிரிவுகளில்  வழக்குப்பதிவு செய்து தனவேலுவை போலீசார் கைது செய்தனர்.  பின்னர், ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

தொடர் சம்பவங்கள்
சென்னையில் நேற்று முன்தினம் போலீசாரை வேலை செய்ய விடாமல் தடுத்த அரிசி மண்டி வியாபாரி, வக்கீல்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் போலீசாரை கல் வீசி தாக்கி மண்டையை உடைத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் போலீசார் பணியின்போது தாக்கப்படுவது அதிகரித்து வருவது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Asimi , Drug, bike, skull break, Asami arrested
× RELATED நர்சிடம் செயின் பறித்த ஆசாமிக்கு தர்ம அடி