×

10 டன் குட்கா பறிமுதல் பூந்தமல்லி குடோனுக்கு சீல்

சென்னை: பூந்தமல்லியில் 10 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்ட குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. பூந்தமல்லி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையையொட்டி பூந்தமல்லி அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏராளமான குடோன்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள குடோன் ஒன்றில் நேற்று முன்தினம் 10 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 5 பேரை கைது செய்து 4 லோடு ஆட்டோ, ஒரு காரை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் கவிக்குமார் தலைமையில், பூந்தமல்லி உணவு பாதுகாப்பு அலுவலர் வேலவன் உள்ளிட்ட அதிகாரிகள் குடோனில் ஆய்வு செய்து சில குட்காவின் தரம் அறிய சோதனைக்கு எடுத்துச் சென்றனர். மேலும் குட்கா வைத்திருந்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போலீசார் முன்னிலையில் சீல் வைத்தனர். மேலும் குடோன் உரிமையாளர் சுந்தரம் (40) என்பவரை பூந்தமல்லி போலீசார் கைது செய்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : chennai,10 ton,gutka,seizure,godown,sealed,
× RELATED கள்ளத்தொடர்பு விவகாரம் வீடு புகுந்து தந்தை, மகன் சரமாரி வெட்டிக்கொலை