×

செல்போன் உயயோகிக்காத காரணத்தால் சதுர்வேதி சாமியாரை கண்டறிவதில் சிக்கல்..: மத்திய குற்றப்பிரிவு போலீசார்

சென்னை: பாலியல் புகாரில் சிக்கி தற்போது தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ள தி.நகரை சேர்ந்த சதுர்வேதி சாமியாரை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் ராமானுஜர் மிஷன் ட்ரஸ்ட், பாஷ்யக்காரா சேரிட்டபள் ட்ரஸ்ட் ஆகியவற்றை நடத்தி வந்தவர் பிரசன்ன வெங்கடாசாரிய சதுர்வேதி சாமியார். அறக்கட்டளையின் தாளாளராக மட்டுமல்லாது பல ஆன்மீக சொற்பொழிவுகளையும் இவர் நடத்தி வர்தார். தற்போது 46 வயதாகும் சதுர்வேதி சாமியாருக்கு பல சீடர்கள் உள்ளனர். இவர் அடிக்கடி வடமாநிலங்களுக்கும், நேபாள நாட்டுக்கும் ஆன்மீக சுற்றுலா சென்று வருவது வழக்கமாகும். இந்த நிலையில், கடந்த 2002ம் ஆண்டு தி.நகரில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் பல பெண்களை மயக்கி அவர்களை பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பாக சதுர்வேதி சாமியார் கடந்த 2004ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.

இதுதொடர்பான வழக்கு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் சதுர்வேதி சாமியார், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். இதையடுத்து இவ்வழக்கை பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், சதுர்வேதி சாமியாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு முதல் சதுர்வேதி சாமியார் தனது இருப்பிடத்தை அடிக்கடி மாற்றி வந்ததாகவும், செல்போன் உயயோகிக்காத காரணத்தால் அவரை கண்டுபிடிப்பதில் பெரும் சிக்கல் இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். எனவே சாமியாருடன் தற்போது நெருக்கமாக உள்ள அவரது ஆதரவாளர்கள், நண்பர்களை பிடித்தால் அவர் பதுங்கியிருக்கும் இடம் குறித்த விவரம் தெரியவரும் என கூறப்பட்டுள்ளது. இதற்கிடையில் உ.பி. மாநிலம் வாரணாசியில் அவர் பதுங்கியிருக்கலாம் எனவும் மத்திய குற்றப்பிரிவி போலீசார் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chaturvedi sammar ,Central Criminal Police , The problem of finding Chaturvedi sammar due to not being able to use cellphone ..: Central Criminal Police
× RELATED பப்ஜி மதனை 2 நாள் காவலில் எடுத்து விசாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ்