×

‘தமிழக பாஜவுக்கு நான்தான் தலைவர்’ கமலாலயத்தில் ரகளையில் ஈடுபட்டவரால் பரபரப்பு

சென்னை: தமிழக பாஜவுக்கு நான்தான் தலைவர் என்று தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் புகுந்து தகராறில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை தி.நகரில் தமிழக பாஜ மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ளது. இங்கு, ேநற்று முன்தினம் மாலை 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் வந்தார். இதை பார்த்த அலுவலகத்தில் இருந்த கட்சியினர்,  நிர்வாகி யாரோ ஒருவர் வந்துள்ளார் என்று நினைத்தனர். சிறிது நேரத்தில் தமிழக பாஜவுக்கு நான்தான் தலைவர் என்று கூறி, அந்த நபர் அலுவலகத்தில் இருந்த கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். இதை கேட்ட கட்சியினர் முதலில் வேடிக்கையாக நினைத்தனர். ஆனால் அவர் அதிகார தோரணையில் அனைவரிடமும் கேள்விகளை கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த கமலாலய ஊழியர்கள்  இதுகுறித்து மாம்பலம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்து வந்து தலைவர் என்று கூறி தகராறில் ஈடுபட்ட நபரை பிடித்து சென்று காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.
அப்போது கடலூரை சேர்ந்த சுதர்சன் (எ) நரேந்திரமாரி (43) என தெரியவந்தது. மேலும், நான்தான் தமிழக பாஜவுக்கு தலைவர் என்று தொடர்ந்து அவர் கூறி வந்தார். பின்னர் போலீசார் அவரிடம் இருந்த செல்போனை வைத்து  அவரது உறவினர்களுக்கு தொடர்பு கொண்டு கேட்டனர். அப்போது அவர் மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டை வீட்டு ஓடி வந்ததாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட சுதர்சனை அவரது  உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : head ,Tamil Nadu Bhajah , Tamil Nadu,bjp
× RELATED கோடை வெப்ப நோய்களை எதிர்கொள்ள...