×

கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தரக்கோரி ரகளை : போதை ஏட்டு கைது

சென்னை: குடிபோதையில் கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தரக்கோரி, வீடு புகுந்து ரகளையில் ஈடுபட்ட தலைமை காவலரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், பாதுகாப்பு பணியில் இருப்பவர் தலைமைக்காவலர் ரஜினிகாந்த் (45). இவருக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், சேத்துப்பட்டில் உள்ள ஒரு பெண்ணுடன் ரஜினிகாந்திற்கு தொடர்பு ஏற்பட்டது. இந்த தொடர்பு பிற்காலத்தில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் அடிக்கடி ரஜினிகாந்த் கள்ளக்காதலி வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம். கள்ளக்காதலிக்கு திருமணம் ஆகாத மகள் ஒருவர் உள்ளார். அவரை அடைய ரஜினிகாந்த் பலமுறை முயற்சி செய்தார். ஆனால், கள்ளக்காதலி அதற்கு இடம் கொடுக்கவில்லை.

 இதையடுத்து,  ேநற்று முன்தினம் குடிபோதையில் ரஜினிகாந்த் தனது கள்ளக்காதலி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த அவர் தனது கள்ளக்காதலியின் மகளை திருமணம் செய்து தரக்கோரி தகராறில் ஈடுபட்டார். இதனால் ஏற்பட்ட மோதலில் ரஜினிகாந்த் தனது கள்ளக்காதலியின் மகளை அடைய முயற்சி செய்தார். ஒரு கட்டத்தில் ரஜினிகாந்த் எல்லை மீற முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது கள்ளக்காதலி சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குடிபோதையில் இளம் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட தலைமை காவலர் ரஜினிகாந்தை பிடித்து காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கள்ளக்காதலியின் மகளை அடையும் நோக்குடன் வந்து தகராறில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, தலைமை காவலர் ரஜினிகாந்த் மீது சேத்துப்பட்டு போலீசார் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது ெசய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kallakadali , Drunken, begging, arresting
× RELATED தெரு விளக்கு வயரை அறுத்து; உடலில்...