×

ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் தான் பிரதமர்: சிறிசேனாவுக்கு சபாநாயகர் கடிதம்

கொழும்பு: ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை ரணில் விக்ரமசிங்கே தான் பிரதமராக இருப்பார் என்று இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் சபாநாயகர் ஜெயசூர்யா குறிப்பிட்டுள்ளார். ராஜபக்சேவை இலங்கை பிரதமராக ஏற்க சபாநாயகர் மறுப்பு தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றி அறிவித்தது ஏன்? என சிறிசேனாவுக்கு அவர் கேள்வியெழுப்பியுள்ளார். மேலும் ராஜபக்சே பிரதமராக அறிவிக்கப்பட்டது சட்டவிரோதமான செயல் என்றும் நாடாளுமன்றம் கூடும் தேதியை மாற்றி அறிவித்ததற்கு அதிபர் சிறிசேனாவிற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சபாநாயகரின் இந்த கடித்ததால் இலங்கை அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக இலங்கை பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கேவை நீக்கிய அதிபர் சிறிசேனா ராஜபக்சேவை நியமித்தார். எனினும் பெரும்பான்மையை நிரூபிக்காத ராஜபக்சே நியமனத்தை ஏற்றுக் கொள்ள இயலாது என தெரிவிக்கும் ரணில் தரப்பு, தாங்களே பதவியில் தொடர்வதாக அறிவித்துள்ளதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் நீடிக்கிறது. இந்நிலையில் சபாநாயகருக்கு ரணில் தான் பிரதமர் என கூறியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ranil ,Sirisena ,Rajapaksa , Rajapaksa, Ranil Wickramasinghe, Sirisena,
× RELATED மக்களின் ஆதரவு இருந்ததால் பொருளாதார...