×

ஐப்பசி மாத பூரத்தையொட்டி நந்தவனத்தில் காட்சியளித்த ரெங்கமன்னார், ஆண்டாள்

திருவில்லிபுத்தூர்: ஐப்பசி மாத பூரத்தையொட்டி திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோயில்  நந்தவனத்தில் ரெங்கமன்னாருடன், ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூரில் மாதந்தோறும் பூரம் தினத்தன்று, ஆண்டாள், தனது பிறந்த இடமான பெரியபெருமாள் கோயிலில் உள்ள  நந்தவனத்தில்  பக்தர்களுக்கு காட்சியளிப்பார். இதற்காக அவரை கோயிலில் இருந்து மேள, தாளம் முழங்க அழைத்து வந்து, நந்தவனத்தில் சிறப்பு பூஜை நடத்துவர். பின்னர் கோயிலுக்கு அழைத்துச் செல்வர். ஆண்டுதோறும், ஐப்பசி மாதம் பூரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தால், நந்தவனத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளிப்பார்.

மற்ற மாதங்களில் நந்தவனத்துக்கு ஆண்டாள் மட்டுமே வந்து செல்வார். இதன்படி ஆண்டாள் கோயிலில் தற்போது ஊஞ்சல் உற்சவம் நடப்பதால், நேற்று முன்தினம் பூரத்தையொட்டி நந்தவனத்தில் ரெங்கமன்னாருடன், ஆண்டாள் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதனைக் காண ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். இதுகுறித்து கோயில் அர்ச்சகர் ஒருவர் கூறுகையில், ‘‘ஜப்பசியில் ஊஞ்சல் சேவை நடப்பதால், இந்த மாதம் மட்டும் நந்தவனத்தில் ஆண்டாள், ரெங்கமன்னாருடன் காட்சியளிப்பார். மற்ற மாதங்களில் அவர் தனியாக காட்சியளிப்பார்,’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rangamannar ,Andal , Aippasi, Rengamannar, Andal
× RELATED பாஜ நிர்வாகிகளிடம் ரூ.3 லட்சம் பறிமுதல்