ஸ்ரீகாளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகர் திடீரென மரணம் அடைந்ததால், நடை அடைக்கப்பட்டது. ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள காளஹஸ்தி சிவன் கோயிலின் தலைமை அர்ச்சகர் சதாசிவ குருக்கள் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.