சென்னை: சிலை திருட்டு பற்றிய 50 வழக்கு ஆவணங்களை போலீஸ் தரவில்லை என்று பொன்.மணிக்கவேல் புகார் தெரிவித்துள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி பொன்.மணிக்கவேல் புகார் அளித்துள்ளார். சிலை கடத்தல் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியதற்கு எதிரான வழக்கில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்குகளின் எப்ஐஆர் தகவலை சிலைகடத்தல் தடுப்பு பிரிவுக்கு தர உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி