×

தமிழகத்தில் 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

ஈரோடு: 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில்  கீரிப்பள்ள ஓடை, ஈரோடை அமைப்பு சார்பில் தூர்வாரப்பட உள்ளது. இன்று காலை தொடங்கிய இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் பங்கேற்று பணியைத் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் 52,000 குழந்தைகளுக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் இந்த அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றும் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு  வந்துள்ளது என்றார். பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பழைய வரலாறு மாறாத வகையில் பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும்.  கோபியை குப்பையில்லாத நகரமாக மாற்ற ரூ.3 கோடியே 86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். குடிநீர் திட்டப் பணிகளுக்காக ரூ.51 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ரூ.52 லட்சம் மதிப்பீட்டில் கீரிப்பள்ள  ஓடையை கான்கிரீட் தளமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர் என்றும் தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பிளஸ் 2 முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக மாவட்ட வாரியாக 25,000  மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும் என்று தெரிவித்தார். ஆடிட்டர் படிப்பிற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும் என்று  பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும் என்றும் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த  அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும் என்றார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chengottiyan ,Tamil Nadu , Tamilnadu, Students, Auditor Training, Minister Chengottiyan
× RELATED தமிழ்நாடு காவல்துறையின் ஃபேஸ்...