×

முள்ளிக்குளம்-தலைவன்கோட்டை சாலை பணி தொடங்கியது

புளியங்குடி: தமிழ்முரசு செய்தி எதிரொலியாக புளியங்குடி அருகே முள்ளிக்குளம்-தலைவன்கோட்டை இணைப்பு சாலை பணிகள் நேற்று தொடங்கியது. இதையடுத்து கிராம மக்கள் அறிவித்திருந்த மறியல் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.சுமார் 4 ஆயிரம் பேர் வசித்து வரும் வாசுதேவநல்லூர் யூனியன் தலைவன்கோட்டை ஊராட்சியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட முள்ளிகுளம்-தலைவன்கோட்டை செல்லும் இணைப்பு சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த சாலையை சீரமைக்க வேண்டும். தலைவன்கோட்டை, சங்கரன்கோவில் வழியாக கோவில்பட்டிக்கு இயக்கப்பட்டு தற்போது நிறுத்தப்பட்டுள்ள 2 தனியார் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும்.தலைவன்கோட்டை-நெற்கட்டும்செவல் செல்லும் வழியில் உள்ள கொள்ளியாறு தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் ஆகிய 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று 25ம்தேதி புளியங்குடி-சங்கரன்கோவில் சாலை தலைவன்கோட்டை விலக்கில் தலைவன்கோட்டை முன்னாள் பஞ்சாயத்து தலைவரும், மாவட்ட திமுக பிரதிநிதியுமான பூசைப்பாண்டி தலைமையில் சாலைமறியலில் ஈடுபட கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர்

இந்நிலையில் முள்ளிகுளம்- தலைவன்கோட்டை இணைப்பு சாலை சீரமைக்கும் பணி நேற்று தொடங்கியது. மேலும் கொள்ளியாறு தரைப்பாலம் அமைக்க ரூ.1 கோடி 30 லட்சத்திற்கு டெண்டர் விடப்பட்டுள்ளது.   இதுதவிர தலைவன்கோட்டை- சங்கரன்கோவில் வழியாக கோவில்பட்டிக்கு, முள்ளிகுளம் சாலை சீரானதும் மீண்டும் பஸ் விடப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று கிராம மக்கள் நடத்துவதாக இருந்த மறியல் கைவிடப்பட்டது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mullikulam-Thalavakkottai , Mullikulam, link road works, start
× RELATED பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தம்..!!