×

புதிய திட்டங்களை செயல்படுத்துவேன்: கரிகாலன் வாக்கு சேகரிப்பு

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் கரிகாலன் நேற்று பெருங்களத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை நேரில் சென்று சந்தித்து, குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அப்பகுதி மக்கள் ஏராளமானோர் அவருக்கு ஆரத்தி எடுத்து, மலர் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.அப்போது அவர் பேசுகையில், ‘‘மழைக்காலத்தில் பாப்பான் கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இப்பகுதி முழுவதும் உள்ள வீடுகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. அப்போது இப்பகுதிக்கு நான் படகில் வந்து பொதுமக்களுக்கு உதவி செய்தேன். அப்போதே முடிவு செய்து இப்பகுதியில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைத்தால்தான் இதற்கு ஒரு தீர்வு என தெரிவித்தேன். இன்று இப்பகுதியில் கட் அண்ட் கவர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.இதுபோல், மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அனைவரும் குக்கர் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்’ என்றார். பிரசாரத்தின்போது, அமமுக செய்தி தொடர்பாளர் தாம்பரம் நாராயணன், ஒன்றிய செயலாளர் நந்தகுமார், தேமுதிக ஒன்றிய செயலாளர் நாகராஜ், நகர செயலாளர் அருள், அமமுகவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் உட்பட அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….

The post புதிய திட்டங்களை செயல்படுத்துவேன்: கரிகாலன் வாக்கு சேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Dambaram ,Thambaram Assembly ,Karigalan ,Bhirangaladur Provincial ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனம் மீது...