×

பஸ்சை நிறுத்தியதால் பொதுமக்கள் அவதி: பெரிய ஒபுளாபுரம் கே.ராஜா (கும்மிடிப்பூண்டி தொகுதி)

கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை செல்வதற்காக கடந்த 5 வருடங்களாகவே மாநகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் கொரொனா வைரஸ் தொற்றை காரணம் காட்டி மாநகரப் பேருந்துகளை நிறுத்தி விட்டனர். குறிப்பாக கும்மிடிப்பூண்டியில் இருந்து 557 மாநகர பேருந்து கும்மிடிப்பூண்டி – சென்னைக்கு தினந்தோறும் சுமார் ஐந்து முறை இயக்கப்பட்டது. ஆனால், தற்போது ஒரு வருடமாக இந்த பேருந்து நிறுத்தப்பட்டது. இதனால் கும்மிடிப்பூண்டி – செங்குன்றம் வரை ஒரு பஸ்சிலும், மற்றொரு பக்கம் செங்குன்றத்திலிருந்து – சென்னை பிராட்வே செல்ல வேண்டியுள்ளது. இதனால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அடுத்து ஆட்சிக்கு வரும் அரசு, பொதுமக்களின் நலன் கருதி கும்மிடிப்பூண்டியில் இருந்து பிராட்வேக்கு மாநகர பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்….

The post பஸ்சை நிறுத்தியதால் பொதுமக்கள் அவதி: பெரிய ஒபுளாபுரம் கே.ராஜா (கும்மிடிப்பூண்டி தொகுதி) appeared first on Dinakaran.

Tags : Periya Obulapuram K. Raja ,Kummidipoondi Constituency ,Kummidipoondi ,Chennai ,Tamil Nadu government ,Kummidipoondi block ,
× RELATED திமுக பாக முகவர்கள் ஆலோசனை கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு