நொய்ட: முதலாளியின் தனிப்பட்ட தகவல்களை திருடி ரூ.20கோடி கேட்டு மிரட்டல் விடுத்த பேடிஎம் பெண் ஊழியர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பேடிஎம் எனப்படும் பணப்பரிவர்த்தனை நிறுவனத்தின் நிறுவனர் விஜய் ஷேகர் சர்மா. இவர் நொய்டா போலீசாரிடம் புகார் மனு கொடுத்தார். அதில், தனது நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் தன்னுடைய தனிப்பட்ட தகவல்களை திருடி வைத்துள்ளதாகவும், ரூ.20 கோடி தரவில்லை என்றால் அதனை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டுவதாகவும் கூறியிருந்தார்.இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார், பேடிஎம் நிறுவனத்தின் பெண் ஊழியர் உட்பட 3 பேரை கைது செய்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி