×

குற்றாலம் பகுதியில் கனமழை : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

தென்காசி: குற்றாலம், தென்காசி பகுதியில் இடி மின்னலுடன் பெய்த பலத்த மழையால் அருவிகளில் நீர்வரத்து அதிகரித்தது. பாதுகாப்பு கருதி மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது.  குற்றாலம், தென்காசி பகுதியில் நேற்று மதியம் வரை வெயில் காணப்பட்ட நிலையில் மதியத்திற்கு பிறகு வெயில் மறைந்து வானில் மேகம் திரண்டது. மாலையில் சுமார் அரை மணி நேரம் இடி மற்றும் மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக மாலையில் குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.

மெயினருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுகிறது. ஐந்தருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி மெயினருவி மற்றும் ஐந்தருவி ஆகியவற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. தென்காசியை அடுத்த ஆய்க்குடியில் பேருந்து நிலைய பகுதியில் மழைக்காக ஒதுங்கி நின்ற கம்பிளியை சேர்ந்த முருகன் (70), ஆனந்த் (27) ஆகிய இருவரும் மின்னல் தாக்கியதில் காயமடைந்தனர். மேலும் மூன்று ஆடுகளும் பலியானது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : courtyard , Courtallam, heavy, meyinaruvi, aintaruvi
× RELATED ஹரிஹரனின் இசை நிகழ்ச்சியில்...