சென்னை : டிசம்பர் மாதத்திற்குள் 672 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை எம்ஜிஆர் நகரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அடுத்த ஆண்டு 1000 பள்ளிகளில் அடல் டிங்கரிங் ஆய்வகங்கள் உருவாக்கப்படும் என்று உறுதிப்பட தெரிவித்தார். இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தேதி ஒரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும் என்றும் செங்கோட்டையன் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி