சென்னை: இந்திய வெல்டிங் நிறுவனம் சார்பில், சென்னையில் உள்ள கெம்பி இந்தியா நிறுவன வளாகத்தில் தேசிய அளவிலான சிறந்த பெண் வெல்டரை தேர்வு செய்வதற்கான போட்டி நடந்தது. இந்தியன் வெல்டிங் நிறுவன தலைவரும், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலைய இயக்குநருமான அருண்குமார் பாதுரி தலைமை தாங்கினார். இந்த போட்டியில் கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து 18 பேர் உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி