×

பகலில் வெல்டர் இரவில் கொள்ளை: பிரபல கொள்ளையன் ைகது

சென்னை: புரசைவாக்கத்தில் அடுத்தடுத்த 2 வீடுகளில் கொள்ளையடித்துவிட்டு மொட்டை மாடியில் பதுங்கிய கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். இவர், பகலில் வெல்டராகவும், இரவில் கொள்ளையனாகவும் சுற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. புரசைவாக்கம் சண்முகராயன் தெருவை சேர்ந்தவர் சேஷாத்ரி (48). இவர், தனது குடும்பத்துடன் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு நேற்று முன்தினம் அதிகாலை வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் மர்ம நபர் ஒருவர் பதுங்கி இருந்தது தெரியவந்தது. உடனே சேஷாத்ரி அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த நபரை பிடித்து, அவரிடம் இருந்து லேப்டாப், 3 செல்போன்கள், ரூ.14 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தார். பிறகு சம்பவம் குறித்து வேப்பேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசார் வருவதை பார்த்து அந்த மர்ம நபர் சேஷாத்ரியை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டார். பின்னர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தப்பி ஓடிய மர்ம நபரை புகைப்படங்களை வைத்து தேடி வந்தனர். அதில், புரசைவாக்கம் சாலைமா நகரை சேர்ந்த தமிழ்செல்வன் (எ) அபிலேஷ் (21) என தெரியவந்தது. இவர், பகலில் வெல்டிங் வேலைக்கு செல்வதும், இரவில் கொள்ளையில் ஈடுபட்டு வந்திருப்பதும் தெரியவந்தது. மேலும், இவர் மீது வேப்பேரி காவல் நிலையத்தில் கடந்த 2015ம் ஆண்டு காப்பர் கம்பிகள் திருடிய வழக்கு நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, கொள்ளையன் தமிழ்செல்வனை போலீசார் கைது செய்தனர். அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஒரு செல்போன், டேப் ஒன்று, ரூ.5 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது….

The post பகலில் வெல்டர் இரவில் கொள்ளை: பிரபல கொள்ளையன் ைகது appeared first on Dinakaran.

Tags : Aikatu ,CHENNAI ,Purasaivakam ,Dinakaran ,
× RELATED பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்; ஆட்டோ,...