×

டிட்லி புயலால் ஒடிசாவில் மழை, வெள்ளப்பெருக்கு

புவனேஸ்வர்: ஒடிசாவில் நேற்று முன்தினம் டிட்லி புயல் மணிக்கு 150 கிமீ வேகத்தில் கரையை கடந்தது. அப்போது பெய்த பெருமழையால் ஆந்திராவில் 8 பேரும், ஒடிசாவில் ஒருவரும் உயிரிழந்தனர். டிட்லி புயல் தற்போது அதிதீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது. இதனால், ஒடிசாவில் கனமழை பெய்வதால் ருசிகில்யா, வன்சதாரா, ஜனகா ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாதிக்கப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மக்கள் குனுபூர் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கட்டாக், புவனேஸ்வர், பூரி உள்ளிட்ட இடங்களில் மழை நீர் சூழ்ந்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dudley ,floods ,Odisha , Diddli Storm, Orissa, Rain, Flood
× RELATED இந்தோனேசியா மேற்கு சுமத்ராவில் கனமழை, வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி..!!