சென்னை: சென்னை பூக்கடை பகுதியில் உள்ள 130 மொத்த வியாபார கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை ஏற்று கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்டேஷனரி உள்ளிட்ட பொருட்களை மொத்த விற்பனை செய்யும் கடைகள் பூக்கடை பகுதியில் உள்ளன. சில்லரை விற்பனைக்கு அனுமதி பெற்று விட்டு மொத்த விற்பனையில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி