×

போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பரிசுடன், இழப்பீடும் வழங்க பெப்சிக்கு கோர்ட் உத்தரவு

புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த கரிஷ்மா என்பவர் கடந்த 2010ம் ஆண்டு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திடம் மனு ஒன்று அளித்தார். அதில், கடந்த 2010ம் ஆண்டு, பெப்சிகோ இந்தியா நிறுவனம் சார்பில் ‘பெப்சி யங்கிஸ்தான் கா வாவ்’ என்ற போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ₹50 லட்சம் பரிசு தொகை என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் நான் பங்கேற்று வெற்றி பெற்றேன். பின்னர் நிறுவனம் சார்பில் எனது வீட்டுக்கு பிரதிநிதிகள் 3 பேர் வந்தனர். அவர்கள் நான் வெற்றி பெற்றதாக என்னை பாராட்டியதோடு, 3 நாளுக்குள் பரிசு தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் அதன்பின் வரவில்லை. இதுகுறித்து நிறுவன பிரிதிநிதி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டேன். அப்போது அவர், நான் நிறுவன பிரதிநிதி அல்ல, கல்லூரி மாணவி என்று தெரிவித்தார். இதனால் எனது பெற்றோர் நேரடியாக நிறுவனத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு பணியாற்றும் ஒரு நபர், பணம் தர முடியாது என மிரட்டல் விடுத்து அனுப்பியுள்ளார். வெற்றி பெற்ற எனக்கு அதற்கான பரிசு தொகையை வழங்க வேண்டும் என்று கோரினார்.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அப்போது ஆணையம் கூறியதாவது: தொழில் வளர்ச்சிக்காக பல நிறுவனங்கள் நுகர்வோரை கவர்ந்திழுக்கும் விதமாக பல போட்டிகளை நடத்துகிறது. ஆனால் முதல் பரிசாக ெபருந்தொகை அளிக்கப்பட வேண்டிய பட்சத்தில் வெற்றி பெற்றவர் ஏமாற்றப்படுகிறார். இந்த வழக்கில், கரிஷ்மா ₹50 லட்சம் பரிசு தொகையை பெற தகுதியுடையவர். எனவே அடுத்த 30 நாட்களுக்குள் அவருக்கு பரிசு தொகையுடன், வழக்கு செலவை சேர்த்து மொத்தம் ₹50,20,000ஐ வழங்க வேண்டும்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PepsiCo Court ,winner , For the winner, competition, With gifts, ,compensation ,epsiCo ,court order
× RELATED கரூரில் அதிமுக-வினர் பிரச்சாரத்தில் பணப்பட்டுவாடா!!