×

வீர, தீர செயலுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்

சென்னை: குடியரசு தினத்தையொட்டி வழங்கப்படும் அண்ணா பதக்கம் பெற தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வீர, தீர செயல்களுக்கான `அண்ணா பதக்கம்’ ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. ₹1 லட்சத்துக்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும். வீர, தீர செயல் புரிந்த தமிழகத்தை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இந்த பதக்கத்தை பெற தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2019ம் ஆண்டு வழங்கப்பட உள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீர செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் தொடர்புடைய மாவட்ட ஆட்சி தலைவர் மூலமாக அரசு முதன்மை செயலாளர், பொதுத்துறை, தலைமை செயலகம், சென்னை-9 என்ற முகவரிக்கு 15.12.2018க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வு குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்வரால் 26.1.2019 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கவுரவிக்கப்படும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Hero ,brother , Brother Medal, apply
× RELATED ஹீரோவுடன் இணைந்து குறைந்தவிலை பைக்...