×

அதிமுக, பாஜ ஆட்சிகள் மீது மக்கள் கோபம் தேர்தலில் அதிமுக கூட்டணி வீழ்த்தப்படும்: வீரப்ப மொய்லி பேட்டி

சென்னை:  தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட தேர்தல் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி சத்தியமூர்த்தி பவனில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:  திமுக-காங்கிரஸ் கூட்டணி வலுவான கூட்டணி. இந்த கூட்டணி 2019ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது எப்படி வெற்றி பெற்றதோ அதேபோன்ற வெற்றியை இந்த தேர்தலிலும் பெறும். கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் வகையில் பாஜ செயல்பட்டு வருகிறது.  அதிமுக கூட்டணி மீது தமிழக மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். எனவே, இந்த தேர்தலில் இக்கூட்டணி வீழ்த்தப்படும். ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிக்காமல் மத்திய அரசு புறக்கணித்தது இலங்கை தமிழர்கள் நலனுக்கு எதிரானது.  புதிய வேளாண் சட்டம், குடியுரிமை திருத்த சட்டம் போன்றவற்றுக்கு அதிமுகவினர் ஆதரவு அளித்து விட்டு விவசாயத்தை பாதுகாப்போம், சிறுபான்மையினருக்கு பாதுகாப்பாக இருப்போம் எனக்கூறி இரட்டை வேடம் போடுகிறார்கள். ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவர் பாஜவோடு கூட்டணி அமைத்து இருக்க மாட்டார். அமலாக்கத்துறை, வருமான வரித்துறை நடவடிக்கை காரணமாக சசிகலா அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.  இவ்வாறு அவர் கூறினார்….

The post அதிமுக, பாஜ ஆட்சிகள் மீது மக்கள் கோபம் தேர்தலில் அதிமுக கூட்டணி வீழ்த்தப்படும்: வீரப்ப மொய்லி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Baja ,Veerapa Moili ,Chennai ,Tamil Nadu Congress Party ,Veerapa Moily ,Sathyamurthi ,Timu ,Congress ,Indirect Alliance ,
× RELATED பாஜ பிரமுகரின் உறவினர் வீட்டில்...