சென்னை: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் உரிய முக்கியத்துவம் வழங்கப்படாதது குறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் இருக்கை ஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு பிறகுதான் நீதிபதி வருவார்களா? என கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி அரசமைப்பு படிநிலை முறையாக பின்பற்றப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
இருக்கை ஒதுக்கீடு குறித்த தலைமை பதிவாளரின் ஆலோசனை ஏற்கப்படவில்லை என கூறிய நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் அதுகுறித்து அதிர்ப்தியை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யானம் நிகழ்ச்சியின் போது அமைச்சர்கள், காவல் துறை அதிகாரிகளுக்கு பின்னால் நீதிபதிகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி
