×

பாதாள சாக்கடை பணி முடிக்கப்படும்: எஸ்.ஆர்.ராஜா வாக்குறுதி

தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ராஜா நேற்று மேற்கு தாம்பரம், கடப்பேரி பகுதியில் வீதி வீதியாக சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார். அப்போது, அவரை பொதுமக்கள் மலர்தூவி, ஆர்த்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். அவர்களிடம் எஸ்.ஆர்.ராஜா பேசுகையில், ‘திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம், திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது என்ற ஒரே காரணத்தினால் கடந்த 10 ஆண்டுகளாக அதிமுகவினர் அந்த பணிகளை முடிக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம், இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்த உடன் விரைந்து முடிக்கப்படும். இதுபோல், சாலை, குடிநீர், மின்விளக்கு, திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை பணிகளும், வளர்ச்சி திட்ட பணிகளும் தாம்பரம் தொகுதிக்கு கிடைத்திட அனைவரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும், என்றார். பிரச்சாரத்தின் போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். …

The post பாதாள சாக்கடை பணி முடிக்கப்படும்: எஸ்.ஆர்.ராஜா வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : S.R.Raja ,Tambaram ,DMK ,S.R. Raja ,Kadapperi ,West Tambaram ,Dinakaran ,
× RELATED தாம்பரம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை!!