×

பண்டாரவாடையில் பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாத நிழற்குடையால் மக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

*இது உங்க ஏரியாபாபநாசம் : பண்டாரவாடையில் பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாத நிழற்குடையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். எனவே நிழற்குடையில் இருக்கை அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கும்பகோணம்-தஞ்சாவூர் மெயின் சாலையில் பாபநாசம் அருகே பண்டாரவாடையில் கும்பகோணம் மார்க்கமாகச் செல்லும் பேருந்துகளில் பயணிக்க ஏதுவாக ஒன்றிற்கு இரண்டாக பயணிகள் நிழற்குடைகள் உள்ளன.ஆனால் இதில் பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லை. இதனால் வயதான பயணிகள், உடல் நல பாதிப்பிற்கு ஆளானவர்கள், கர்ப்பிணிகள் சிரமப்படுகின்றனர்.பண்டாரவாடையில் ஒரு பயணிகள் நிழற்குடையே போதும். இதிலும் பயணிகள் உட்கார ஏதுவாக இருக்கை வசதி ஏற்படுத்தித் தர பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்….

The post பண்டாரவாடையில் பயணிகள் உட்கார இருக்கைகள் இல்லாத நிழற்குடையால் மக்கள் அவதி-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bandarawada ,
× RELATED பாலத்தில் குளம்போல் தேங்கிகிடக்கும்...