×

புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: அசன் மவுலானா வாக்குறுதி

சென்னை: வேளச்சேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அசன் மவுலானா தொகுதிக்கு உட்பட்ட திருவான்மியூர் கடற்கரையில் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபடி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார். தொடர்ந்து திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் அருகே பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்தும், திமுக ஆட்சிக்கு வந்தால், அதை நிறைவேற்ற நிச்சயம் வலியுறுத்துவோம் என்று மக்களிடம் தெரிவித்தார். இதை கேட்ட அவர்கள், எங்கள் ஓட்டு உங்களுக்கு தான். இந்த தொகுதியை காங்கிரஸ் கோட்டையாக மாற்றுவோம் என்று தெரிவித்தனர்.பின்னர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் வடக்கு மாட வீதி, காரனேசன் காலனி, அண்ணா தெரு, வால்மீகி தெரு, ஓடைக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்து, மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து என்னை வெற்றி பெற செய்தால் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காண்பேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன். தெருக்களை தரம் உயர்த்துவேன். திமுக ஆட்சியில் கொண்டு வரப்படும் மக்கள் நல திட்டங்கள் அனைத்தும் செயல்படுத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார். பிரசாரத்தின் போது, திமுக பகுதி செயலாளர்கள்கள் துரை கபிலன், கணேஷ்குமார், வட்ட செயலாளர்கள் ராஜா, ரமணன்,  ராஜாமணி, விசிக ஸ்டீபன் மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி உள்ளிட்ட பல்வேறு தோழமை கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்….

The post புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்: அசன் மவுலானா வாக்குறுதி appeared first on Dinakaran.

Tags : Asan Maulana ,Chennai ,Congress ,Velachery ,Thiruvanmiyur ,
× RELATED விருதுநகர் காங்கிரஸ் வேட்பாளர்...