×

ஒரே பெயரில் 2 பேர் தாக்கல் பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு நிறுத்தி வைப்பு..இன்று முடிவு செய்து அறிவிக்கப்படும்

சென்னை: துறைமுகம் தொகுதியில் ஒரே பெயர் மற்றும் தந்தையின் முதல் எழுத்து ஒன்றாக இருந்ததால் பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. இன்று சரி பார்க்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்  என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் 12ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் முடிந்தது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 551, பெண்கள் 83  என மொத்தம் 634 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். துறைமுகம் தொகுதியில் ஆண்கள் 48, பெண்கள் 2 என 50 பேர் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு பரிசீலனை நடந்தது. கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்புமனு, ஆயிரம்விளக்கு திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன், பாஜ வேட்பாளர் குஷ்பு ஆகியோரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. துறைமுகம் தொகுதியில் பாஜ சார்பில்  போட்டியிட வினோஜ் பி.செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த வேட்புமனு பரிசீலிக்கப்பட்டபோது, ஒரே பெயர், தந்தையின் முதல் எழுத்து ஒன்றுபோல் இருந்ததால் பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனுவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதையடுத்து இன்று  இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அரசு பதிவேட்டில் சரி பார்க்கப்பட்டு வேட்புமனு ஏற்பது குறித்து அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.  இதன் காரணமாக, பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம்  வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் வேட்புமனு சரி செய்யப்பட்டு தகுதியானவர்களின் பட்டியல் தேர்தல் ஆணையம் மூலம் வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்தவர்கள், மனுவை வாபஸ் பெற விரும்பினால், மார்ச் 22ம் தேதிக்குள் வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது….

The post ஒரே பெயரில் 2 பேர் தாக்கல் பாஜ வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் வேட்புமனு நிறுத்தி வைப்பு..இன்று முடிவு செய்து அறிவிக்கப்படும் appeared first on Dinakaran.

Tags : Vinoj B. ,Chennai ,Vinoj B ,Dinakaran ,
× RELATED தயாநிதி மாறன் எம்பி தொடர்ந்த அவதூறு...