×

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது

சென்னை: சென்னை வேளச்சேரி அடுத்த தரமணி பகுதிக்கு திருவல்லிகேணி பகுதியில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, வீட்டில் பதுக்கி வைத்து சிலர் விற்பனை செய்வதாக அடையாறு போலீஸ் துணை கமிஷனர் விக்ரமிற்கு ரகசிய  தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில், தரமணி சப்-இன்ஸ்பெக்டர் மோசஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தரமணி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, தரமணி எம்ஜிநகர் ராஜாஜி தெருவில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து விற்ற கார்த்திக் (எ)குரங்கு கார்த்திக்(20),, திருவல்லிக்கேணி சலீம்  மொய்தீன்(24), பெரம்பூர் முகமது ஹபீஸ்(23) ஆகியோரை கைது ெசய்தனர்….

The post வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Velacheri ,Tharamani ,Thiruvalligeni ,
× RELATED சென்னையில் உலக பத்திரிகை தினவிழா:...