×

முதல்வர் பழனிசாமியோடு ஊழல் செய்வதில் அமைச்சர்கள் போட்டிபோட்டு முன்னேற்றம்!: தேர்தல் பரப்புரையில் தயாநிதிமாறன் விமர்சனம்..!!

கோவை: முதலமைச்சர் பழனிசாமியோடு போட்டிபோட்டு ஊழல் செய்வதில் அமைச்சர்கள் முன்னேறி இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன் விமர்சனம் செய்துள்ளார். தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கார்த்திகேய சிவசேனாபதியை ஆதரித்து பல்வேறு இடங்களில் தயாநிதிமாறன் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், மக்களுக்காக எந்த திட்டங்களையும் அமைச்சர் வேலுமணி நிறைவேற்றவில்லை என்றார். இதனை மறைக்க தனது சொந்த செலவில் இலவச திருமணம் செய்து வைப்பதாக அவர் ஏமாற்றுகிறார். மேலும் கருப்பு பணத்தில் தான் இந்த திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் என்று தயாநிதிமாறன் குற்றம்சாட்டினார். முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொருப்பேற்றது முதல், தமிழகம் முன்னேறுகிறது என கூறி வருகிறார். ஊழலில் மட்டும் தான் தமிழகம் முன்னேறுகிறது. முதலமைச்சருக்கு அடுத்தபடியாக அமைச்சர் வேலுமணி தான் அதிகளவு ஊழல் செய்தவர் என குறிப்பிட்டார். திமுக தலைவர் ஸ்டாலின் கூறியது போல ஊழல் பணத்தில்தான் இந்த அரசு நடந்து வருகிறது என்றும் தயாநிதிமாறன் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் தயாநிதிமாறன் கலந்துக்கொண்டார். அப்போது பேசிய அவர், ஊழல் அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் தோற்க போவது உறுதி என்று தெரிவித்துள்ளார். …

The post முதல்வர் பழனிசாமியோடு ஊழல் செய்வதில் அமைச்சர்கள் போட்டிபோட்டு முன்னேற்றம்!: தேர்தல் பரப்புரையில் தயாநிதிமாறன் விமர்சனம்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Palaniswami ,Dayanithimaran ,Coimbatore ,Parliament ,Thondamuthur ,CM ,Dinakaran ,
× RELATED மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில்...