×

அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் சிக்கினார்: 2 இளம்பெண்கள் மீட்பு

சென்னை: அமைந்தகரை அய்யாவு காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், சந்தேகத்திற்கிடமான வகையில், வாலிபர்கள் வந்து செல்வதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விபாச்சார தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் மதியம் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்புக்குள் அடிக்கடி வாலிபர்கள் வந்து சென்றது தெரியவந்தது. உடனே விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக அந்த அடுக்குமாடி குடியிருப்பு வீட்டிற்குள் புகுந்து சோதனை நடத்தினர். அதில், திருவேற்காடு கனக துர்கா நகரை சேர்நத் சங்கீதா (28) என்ற பாலியல் புரோக்கர், 2 இளம்பெண்களை ைவத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் பெண் புரோக்கர் சங்கீதாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட 2 இளம்பெண்கள் நீதிமன்ற உத்தரவுப்படி அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்….

The post அடுக்குமாடி குடியிருப்பில் பாலியல் தொழில் நடத்திய பெண் புரோக்கர் சிக்கினார்: 2 இளம்பெண்கள் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Nadalgarai Ayyavu Colony ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்