×

போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற வாலிபர் மைதானத்தில் மயங்கி சாவு

மதுரை: விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல்லை சேர்ந்தவர் முனியாண்டி மகன் பாரதி (22). பட்டதாரியான இவர், போலீஸ் எழுத்துத்தேர்வில் தேர்ச்சி  பெற்றுள்ளார். அடுத்த மாதம் நடக்கவுள்ள உடற்திறன் தகுதித் தேர்விற்காக தற்போது பயிற்சி பெற்று வருகிறார். இதற்காக தினமும் மதுரை வந்து, ரிசர்வ்லைன் மைதானத்தில், மற்ற நபர்களுடன் சேர்ந்து பயிற்சி எடுத்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மதுரை வந்த பாரதி, ரிசர்வ்லைன் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. அருகிலிருந்த மாரியம்மன் கோயிலில் உட்கார்ந்தவர் மயங்கி விழுந்தார். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு  செல்லும் வழியில் இறந்தார்….

The post போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற வாலிபர் மைதானத்தில் மயங்கி சாவு appeared first on Dinakaran.

Tags : Manangi Chau ,Madurai ,Bharati ,Munyandi ,Modithankalla ,Sivakasi, Virudhunagar District ,Volunki Chau ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை