×

மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு பணிகள் தீவிரம்

அலங்காநல்லூர்: அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க காளைகள், வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வரும் ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கிராம விழா கமிட்டி நிர்வாகத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளை மற்றும் வீரர்கள் பதிவு ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டது. இந்த ஆண்டும், அதேபோல் ஆன்லைன் மூலம் காளைகள், வீரர்கள் பதிவேற்றம் செய்யப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதற்கான ஆவணங்களை தயார் செய்வதில் வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பதிவேற்றம் செய்வதற்கு காளை உரிமையாளர், உதவியாளர் ஆகியோரது புகைப்படம் மற்றும் புகைப்படத்தில் காளையின் தற்போதைய புகைப்படம், அதில் உரிமையாளர், உதவியாளர் ஆகியோரது ஆதார், செல்போன் எண்கள், முகவரி ஆகியவை அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும். அதனை கால்நடை மருத்துவரிடம் சமர்ப்பித்து காளைக்கான உடல் தகுதிச்சான்று பெற வேண்டும். அதன்பின்னர் ஆன்லைன் பதிவேற்றதற்கான ஆவணங்களை தயார் செய்வதில் காளை உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்….

The post மதுரை மாவட்ட ஜல்லிக்கட்டில் பங்கேற்க காளைகள், மாடுபிடி வீரர்கள் ஆன்லைன் பதிவு பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.

Tags : Madupidi ,Madurai District ,Jallikat ,Alanganallur ,Bulls ,Palamedu ,Avaniyapuram Jallikattu ,Madurai ,District Jallikat ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை