×

அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை வேட்டி, சேலை, கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ.2,500

சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று வெளியிட்ட அறிக்கை: அதிமுக ஆட்சியில் 21 பொருட்களுடன் ரூ.2500 ரொக்கமும் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. தற்போது பொங்கல் பொருட்கள் குறைக்கப்பட்டதுடன், ரொக்கமும் குறைவாக அறிவித்திருப்பது ஏழை எளிய மக்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தமிழக அரசு மறு பரிசீலனை செய்து, தமிழக மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மன நிறைவோடு சிறப்பாகக் கொண்டாடும் வகையில் கடந்த ஆட்சியில் வழங்கிய குறைந்தபட்சம் 2,500 ரூபாயாவது உயர்த்தி வழங்க வேண்டும். மேலும் அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவச, வேட்டி சேலை வழங்கிட வேண்டும். பொங்கல் பரிசில் கரும்பு இடம் பெறாததை கண்டித்து தமிழக விவசாயிகள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் விளைவித்த செங்கரும்பை அரசு கொள்முதல் செய்து, பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பும் வழங்கி விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் இந்த பொங்கல் தித்திக்கும் பொங்கலாக அமைய இந்த அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post அரசுக்கு விஜயகாந்த் கோரிக்கை வேட்டி, சேலை, கரும்புடன் பொங்கல் பரிசாக ரூ.2,500 appeared first on Dinakaran.

Tags : Vijayakanth ,Pongal ,Chennai ,Dadi Vijayakanth ,Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு...