×

டிரைவர் கொலை: 3 பேர் கைது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் அருகே ஆக்கூர் முக்கூட்டு பகுதியை சேர்ந்தவர் சுவாமிநாதன் மகன் திருவேங்கடநாதன்(24). டிரைவர். இவரது உறவினர், ஆக்கூர் வேளாண் திடல் பகுதியை சேர்ந்த கண்ணையன் மகன் கலியபெருமாள்(26). இவர்கள் குடும்பத்தினர் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது.இதில் ஆத்திரமடைந்த கலியபெருமாள், தனது கூட்டாளிகள் அருண் ஆகாஷ்(26), காலமநல்லூர் ராதாநல்லூரை சேர்ந்த வாலிபர் ஆகியோருடன் சேர்ந்து திருவேங்கடநாதனை சரமாரியாக கட்டையால் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் செம்பனார்கோயில் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கலியபெருமாள் உள்பட 3 பேரை கைது செய்தனர்….

The post டிரைவர் கொலை: 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Mayiladuthurai ,Swaminathan ,Thiruvenkatanathan ,Akure Trikot ,Sembanarkoil, ,Mayiladuthurai district ,
× RELATED கோடை காலத்தில் தகுந்த நேரத்தில்...