×

இயற்கை சீற்றங்களால் பாதித்தோருக்கு நிவாரணம் இல்லை; ஆனால் ரூ.8,000 கோடிக்கு சொகுசு விமானம்!: மத்திய அரசு மீது உதயநிதி தாக்கு..!!

கிருஷ்ணகிரி: கஜா உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத மத்திய அரசு, 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு விமானங்கள் வாங்கியுள்ளதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரையை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்குகளும் பாரதிய ஜனதா கட்சிக்கு போடும் வாக்குகளே என்பதை மறந்துவிடக்கூடாது என தெரிவித்தார். மேலும், கஜா உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு மத்திய அரசு உரிய நிவாரணம் வழங்கவில்லை என குற்றம்சாட்டிய அவர், ஆனால் 8 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொகுசு விமானங்களை வாங்கியுள்ளதாகவும் புகார் கூறினார். நீட் தேர்வால் 14 மாணவிகள் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது செவிலியர்கள் படிப்புக்கும் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அவர் சாடினார். வாக்கு சேகரிக்க வரும் அதிமுக வேட்பாளர்களிடம் ஜெயலலிதா எப்படி மரணம் அடைந்தார்? என்று கேள்வி எழுப்புமாறும் அவர் மக்களிடம் வலியுறுத்தினார். ஊத்தங்கரையில் அரசு கலைக்கல்லூரி மற்றும் மாம்பழக்கூழ் தொழிற்சாலை உருவாக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். …

The post இயற்கை சீற்றங்களால் பாதித்தோருக்கு நிவாரணம் இல்லை; ஆனால் ரூ.8,000 கோடிக்கு சொகுசு விமானம்!: மத்திய அரசு மீது உதயநிதி தாக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Udhayanidhi ,Krishnagiri ,central government ,Tamil Nadu ,Gaja ,Udayanidhi ,
× RELATED தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும்...