×

ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஊட்டி : விடுமுறை தினமான நேற்று ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. ஊட்டியில் நிலவும் குளு குளு காலநிலையை அனுபவிக்க வெளியூர்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனர். கொரோனா காலகட்டத்திற்கு பின் வார நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. அதேநேரம் வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊட்டிக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.  இந்நிலையில் ஞாயிற்றுகிழமை விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக கேரள, கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் அதிகம் தென்பட்டனர். நேற்றைய தினம் பனிமூட்டத்துடன் மந்தமான காலநிலை நிலவிய போதும், அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் ஊட்டி படகு இல்லத்தில் இருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இதேபோல் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா தொட்டபெட்டா உள்ளிட்ட இடங்களிலும் கூட்டம் காணப்பட்டது….

The post ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள் appeared first on Dinakaran.

Tags : Ooty lake ,Ooty ,Ooty Boathouse ,Ooty… ,Dinakaran ,
× RELATED பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட...