×

இடைப்பாடி அருகே கள்ளக்காதல் விவகாரம்: தொழிலாளி படுகொலை: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி கொங்கணாபுரம் அருகே கோரணம்பட்டி செந்தில்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (57), கூலித்தொழிலாளி. அதே பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி கமலாவுக்கும் (56), முருகனுக்கும் பல ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. இதையறிந்த கமலாவின் மகன் கார்த்தி, மருமகள் சுமதி ஆகியோர், இருவரையும் கண்டித்துள்ளனர். இதனால் முருகன், அடிக்கடி கார்த்தியின் வீட்டிற்கு வந்து தகராறில் ஈடுபட்டுள்ளார். நேற்று முன்தினம் மாலை, கார்த்தியின் வீட்டிற்கு குடிபோதையில் வந்த முருகன், அங்கிருந்த சுமதியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுமதி, அவரது தாய் அலமேலு (60), சுமதியின் மகன்கள் நித்திஷ், மவுலிஸ் ஆகியோர் முருகனை கட்டி வைத்து கட்டையால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்த நிலையில், 4 பேரும் தப்பியோடி விட்டனர். மயங்கிய நிலையில் இருந்த அவரை உறவினர்கள், இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு நேற்று காலை முருகன் உயிரிழந்தார். கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிந்து சுமதி, அலமேலு, நித்திஷ், மவுலிஸ் ஆகியோரை கைது செய்தனர்….

The post இடைப்பாடி அருகே கள்ளக்காதல் விவகாரம்: தொழிலாளி படுகொலை: 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Ethapadi ,Edippadi ,Murugan ,Koranampatti Senthilpalayam ,Konganapuram, Edippadi, Salem district ,Eppadi ,
× RELATED புயலுக்கு கேட்ட நிவாரணம்...