×

வண்டலூர் உட்கோட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 89 பேர் கைது

சென்னை: செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி சுந்தரவதனம் வெளியிட்ட அறிக்கை: சட்டமன்ற தேர்தல் சம்பந்தமாக வண்டலூர் உட்கோட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பிற்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தியும், சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது கூடுவாஞ்சேரி ஓட்டேரி மற்றும் மறைமலை நகர் ஆகிய காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் தனிப்படை போலீசார் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தனர். தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் மீது 63 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும், இதுகுறித்து 89 பேரை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post வண்டலூர் உட்கோட்டத்தில் சமூக விரோத செயல்களில் ஈடுபட்ட 89 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Vandalur Utkotam ,Chennai ,Chengalpattu district ,SP Sundaravathanam ,Vandalur ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...