×

கோவையில் பள்ளி மாணவி கடத்தி கொடூர கொலை:சாக்குமூட்டையில் சடலம் வீச்சு

கோவை: கோவை சரவணம்பட்டியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழும், பெண்ணுக்கு 17 மற்றும் 14 வயதில் மகள்கள் உள்ளனர். இதில் 14 வயதான, 10ம் வகுப்பு மாணவி கடந்த 11ம் தேதி வௌியே சென்றுள்ளார். செல்போனில் பேசியபடி ரோட்டை கடந்து சென்றதை அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி ஒருவர் பார்த்துள்ளார். அதன்பின், மாணவி வீட்டிற்கு வரவில்லை. இது குறித்து 13ம் தேதி மாணவியின் தாய், கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து மாணவியை ேதடி வந்தனர். இந்நிலையில், நேற்று மதியம் சரவணம்பட்டி யமுனா நகர் பகுதியில் உள்ள ஒரு சாக்கடை கால்வாய் பகுதியில் துர்நாற்றத்துடன் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. சரவணம்பட்டி போலீசார் சென்று சாக்கு மூட்டையை திறந்து பார்த்தனர். அதில் அழுகிய நிலையில் கை, கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு சிறுமி இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது ஆடை மற்றும் சில அடையாளங்களை வைத்து இறந்தது, காணாமல் போன மாணவி என உறுதி செய்யப்பட்டது. கால்களை கழுத்துடன் சேர்த்து கட்டியுள்ளனர். மாணவி சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை துணியால் அடைத்துள்ளனர். மாணவியை வீட்டில் இருந்து நைசாக பேசி வெளியே வரவழைத்து, கடத்தி சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுத்திருக்கலாம். மாணவியின் எதிர்ப்பை சமாளிக்க முடியாமல் கொலை செய்து சடலத்தை சாக்கு மூட்டையில் போட்டு குசாக்கடை குவியலில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்நிலையில், கோவை அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மாணவியின் சடலத்தை வாங்க மறுத்து மறியல் செய்தனர். அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்….

The post கோவையில் பள்ளி மாணவி கடத்தி கொடூர கொலை:சாக்குமூட்டையில் சடலம் வீச்சு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Saravanampatti ,
× RELATED வடக்கு மண்டலம் பகுதியில் புதிய...