×

உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை கொரோனாவில் இறந்த மருத்துவர் உடல் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது

சென்னை: சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் நரம்பியல் மருத்துவர் சைமன். கீழ்ப்பாக்கத்தில் தனியார் மருத்துவமனை நடத்தி வந்த இவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரது உடலை அண்ணாநகரில் உள்ள வேலங்காடு சுடுகாட்டில் சுகாதாரத்துறை வழிகாட்டுதலின்படி அடக்கம் செய்ய எடுத்து சென்றபோது, அங்கிருந்த பொதுமக்கள் கொரோனாவால் இறந்த மருத்துவரின் உடலை இங்கு புதைக்கக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார்  மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் மீது கற்களை வீசி தகராறில் ஈடுபட்டதில், சென்னை மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ஒருவரின் மண்டை ஒடைந்தது. இந்த சம்பவம்  பெரும் பரப்பரப்பை ஏற்ப்படுத்தியது. இதையடுத்து, மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யபோகும் போது, அங்கும் அடக்கம் செய்யக்கூடாது என டி.பி சத்திரம் பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், மாநகாரட்சி அதிகாரிகள் மருத்துவர் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தினறினர். பிறகு அண்ணாநகர் துணை ஆணையர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பலத்த பாதுகாப்புடன் அவரது உடலை மறுபடியும் அண்ணாநகரில் உள்ள வேலங்காடு சுடுகாட்டில் அடக்கம் செய்தனர். இந்நிலையில், அவரது மனைவி ஆனந்தி, கிறிஸ்தவ முறைப்படி தனது கணவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் அடக்கம் வேண்டும், என சென்னை மாநகராட்சி அதிகாரியிடம் மனு அளித்திருந்தார். ஆனால், இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் ஆனந்தி சைமன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மருத்துவரின் உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் மறு அடக்கம் செய்ய 2 நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டது. அதன்படி, நேற்று அதிகாலை 5 மணி அளவில் சென்னை மாநகராட்சி அமைந்தகரை 8வது மண்டல அதிகாரி முருகேசன்  முன்னிலையில், வேலங்காடு சுடுகாட்டில் இருந்து மருத்துவர் சைமன் உடல் தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. கவச உடையணிந்த மாநகராட்சி ஊழியர்கள், டாக்டர் உடலை தோண்டி எடுத்து, காலை 7.30 மணி அளவில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது மனைவி ஆனந்தி, அவரது மகன்கள் ஆண்டன், அசோக்குமார் ஆகியோர் முன்னிலையில் கிறிஸ்தவ முறைப்படி சடங்குகள் நடத்தப்பட்டு மருத்துவர் சைமனின் உடல் மறு அடக்கம் செய்யப்பட்டது….

The post உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை கொரோனாவில் இறந்த மருத்துவர் உடல் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது appeared first on Dinakaran.

Tags : Corona ,Christian ,Chennai ,Simon ,Chennai Samanthakar ,Obey ,Dinakaran ,
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...