×

புகார் கொடுத்த மனைவியை பயமுறுத்துவதற்காக வடமாநில இளைஞரை அடி வெளுத்துக் கட்டிய வாலிபர்-வீடியோ வைரலால் தலைமறைவு

வேடசந்தூர் : வேடசந்தூர் அருகே மனைவியை மிரட்டுவதற்காக, உடன் பணிபுரிந்த வடமாநில இளைஞரை தாக்கும் வாலிபரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் ரோடு சேனங்கோட்டையில் உள்ள உணவகத்தில் சப்ளையராக பணியாற்றுபவர் ஆனந்த். இவருடைய மனைவி கார்த்திகா. இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் தனது மகளை ஆனந்த் கொடூரமாக தாக்கியுள்ளார். அதனை தட்டி கேட்ட மனைவி கார்த்திகாவையும் தாக்கியுள்ளார். இதுகுறித்து கார்த்திகா திருப்பூர் மாவட்டம், ஊதியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.கார்த்திகாவின் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தை தேடி வந்தனர். ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார். தலைமறைவான நிலையில், கடந்த ஆறு மாதங்களாக வேடசந்தூர் அருகே சேனங்கோட்டையில் ஹோட்டலில் வேலை பார்த்துள்ளார். மனைவி தன் மீது கொடுத்துள்ள புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என்பதற்காக தன்னுடன் பணிபுரிந்த வடமாநில தொழிலாளரை பிடித்து கொடூரமாக தாக்கியுள்ளார்.அந்த வடமாநிலை இளைஞரை கையில் கிடைத்த கரண்டி கம்பிகளை கொண்டு கொடூரமாக தாக்கியதோடு மட்டுமில்லாமல் அதனை வீடியோவாக எடுத்து தனது மனைவிக்கும் அனுப்பி வைத்துள்ளார்.‘திருப்பூர் காவல்நிலையத்தில் தன் மேல் உள்ள வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் இந்த நிலை உனக்கும் வரும்’ என்று அவரது மனைவியை மிரட்டியும் உள்ளார். ஆனந்த் அனுப்பிய வீடியோவை, கார்த்திகா திருப்பூர் போலீசாருக்கும், சமூகவலைதளங்களிலும் பகிர்ந்தார். இதனை தொடர்ந்து வடமாநில இளைஞரை ஆனந்த் தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகவே ஹோட்டலில் இருந்து அவர் தப்பி ஓடிவிட்டார். வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள ஆனந்தை தேடி வருகின்றனர்….

The post புகார் கொடுத்த மனைவியை பயமுறுத்துவதற்காக வடமாநில இளைஞரை அடி வெளுத்துக் கட்டிய வாலிபர்-வீடியோ வைரலால் தலைமறைவு appeared first on Dinakaran.

Tags : Vedasanthur ,Vedasantur ,Valiber ,
× RELATED ஆவணங்கள் இன்றி கொண்டு சென்ற ரூ.1.54 கோடி பறிமுதல்